புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2015

பிரித்தானிய போர் விமானத் தளத்தினுள் சிம்பிளாக உள்ளே புகுந்த அகதிகள்- பாதுகாப்பில் ஓட்டை !



பிரித்தானிய போர் விமானத் தளத்தினுள் அகதிகள் சிலர் உட்புகுந்துள்ளார்கள். சைப்பிரஸ் நாட்டில் உள்ள படைத் தளத்திலேயே இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது. இதனால் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படகில் வந்த சில அகதிகள் , பிரித்தானிய படைத் தளம் என்று தெரியாமலே அங்கே உட்புகுந்து விட்டார்கள். அப்படி என்றால் பாதுகாப்பில் பெரும் ஓட்டை இருப்பது இப்போது தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விடையம் மேலும் அதிர்சியை தருகிறது.
அது என்னவென்றால் , ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த இங்கிருந்தே விமானங்கள் புறப்படுகிறது. அகதிகள் வந்தது போன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த விமான தளத்தினுள் வந்து தாக்குதல் நடத்தி இருந்தால் , பல பிரித்தானிய போர் விமானங்கள் நாசமாகி பெரும் அழிவு ஏற்பட்டு இருக்கும் எறு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

ad

ad