புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

குற்றம் புரிந்த பலர் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட பல்வேறு மோசமான
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
அவ்வாறானவர்களைக் கைது செய்வதற்கும், போர் முடிந்த பின்னரும் சுமார் 7 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரிக்கை விடுத்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த நபர் யார் என்ற தகவலை கடந்த அரசாங்கத்துக்கு பெயர் விபரங்களுடன் வழங்கிய போதும் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரைக் கைது செய்வதற்கு புதிய அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ad

ad