வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடபகுதிக்கான இரவு நேர ரயில் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை தலைமன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கல்கமுவை- அம்பன்பொல பகுதியில் தடம்புரண்டுள்ளது.
தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்ற எடுத்த முயற்சிகள் இரவு வரை கைகூடவில்லை.
மேலும் ரயில் தடம்புரண்ட பகுதியில் தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று மாலை கொழும்பிலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு பயணிக்கவிருந்த ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்க தயாராகவிருந்த இரண்டு ரயில்களும் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரயில் பயணக் கட்டணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.