புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2015

எரிக்கப்பட்ட யூதர்களின் புனிதத்தலம்: உச்சகட்ட மோதலில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் (வீடியோ இணைப்பு)


இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இவர்களின் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்பதற்கு அடையாளமாக, ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர், நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இந்நிலையில் மேற்கு கரை பகுதி நப்லஸ் என்ற இடத்தில் உள்ள யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன போராட்டக்காரர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்ததால், மோதல் முற்றியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் இதுகுறித்து கூறியபோது, நப்லஸ் சம்பவம் துரதிஷ்டவசமானது, இதுதொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, பாலஸ்தீனர்கள் புதிதாக கத்திக்குத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர், அதற்கு அஞ்ச மாட்டோம், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அடுத்த சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad