கடந்த 18.10.2015ம் திகதி புற்று நோயினால் இறந்த விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல் துறை பொறுப்பாளார் தமிழினி என்ற அழைக்கப்படும் திருமதி ஜெயக்குமார் சிவகாமியின் இறுதி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று பரந்தன் இந்து பொது மயானத்திற்கு புகழ்உடல் கொண்டு செல்லப்படுகின்றது.
இந்த இறுதி நிகழ்வில் பெருமளவான பொது மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.