புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் சண்டையிட்டு உயிரிழந்த இளைஞர்!

சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே,  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற  கும்பலிடம் இருந்து
காப்பாற்ற முயன்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் மறைமலை நகர் செல்வதற்காக ஜான்சன் என்ற இளைஞர்  பல்லாவரம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே வந்துள்ளார். அப்போது பாலத்தின் அடியில் பெண்ணிடம் ஒரு கும்பல்  பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குழந்தைக்கு தாய்பால் புகட்டிக் கொண்டிருந்த அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை பார்த்த ஜான்சன் தட்டி கேட்டுள்ளார். அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க முயன்றுள்ளார். 
அப்போது கும்பலில் இருந்த ஒருவர் ஜான்சனை கத்தியால் குத்தியுள்ளார்.இந்த தருணத்தில் அந்த பெண் தப்பி விட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த கும்பல், ஜான்சனை இழுத்து அருகில் இருந்த புதருக்குள் போட்டு விட்டு தப்பி விட்டது. இதனால் ஜான்சன் மயக்கமுற்று கிடப்பது, யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்துதான் இது தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்குள் ஜான்சன் இறந்து விட்டார். 

கொலை செய்யப்பட்ட ஜான்சன் 20 வயதே நிரம்பியவர். பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், சதீஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

ad

ad