புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், சிறைகளில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள தனது கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கே.பி. வெளியில் இருப்பது சிறந்தது என்றால், விடுதலைப் புலிகளின் நெத்திலி மீன்களை பிடித்து வைத்திருப்பதில்லை பயனில்லை.
இதனால், அவர்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ad

ad