இங்கிலாந்தில் நடைபெற்று வரும் றக்பி உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில்நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆர்ஜன்டீனாவும் அவுஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டியில் 15–29 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
இதேவேளை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தரவரிசைப் பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் நியூஸிலாந்து அணியும்இ தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப்போட்டியில் இரு அணிகளும் சளைக்காமல் சரிக்கு சமமாக தங்கள் வெற்றியை உறுதிசெய்யப் போராடியபோதும் இறுதியில் நியூஸிலாந்து 20 – 18 என வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த றகபி உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை வெல்லப்போவது ஆஸியா? நியூஸியா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.