தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் அஞ்சலி விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு கலந்துகொண்டார். இன்று காலை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதற்காக முன்பதிவு செய்திருந்தார் வைகோ.
இதேபோல் சிவகாசியில் நடந்த தே.மு.தி.க பொதுகூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தும் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில், வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அருகருகே அமர்ந்து பயணித்தனர்.
இதேபோல் சிவகாசியில் நடந்த தே.மு.தி.க பொதுகூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தும் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில், வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அருகருகே அமர்ந்து பயணித்தனர்.
வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டியக்கத்தில் விஜயகாந்தின் தேமுதிகவையும் கொண்டுவரவேண்டும் என்று அதில் இடம்பெற்றவர்கள் விரும்புகிற சூழலில், இந்த திடீர் சந்திப்பு அதற்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இது மதிமுக மற்றும் மக்கள் நல கூட்டியகத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.