புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்: பான் கீ மூன்

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின், பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஆதரவு வழங்கி இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் மேலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, புதிய அரசாங்கத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவுடன் இலங்கை நெருங்கிய தொடர்பினை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad