புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒட்டகப்புலத்தில் மாபெரும் கௌரவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச்
சென்ற வேளை ஒட்டகப்புலம் மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்று மாபெரும் கௌரவிப்பை வழங்கினர்.

மேலும் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை கௌரவப்படுத்தும் முகமாக  ஒட்டகப்புலத்திலுள்ள சென். மேரிஸ் தேவாலயத்தில் விசேட தேவாலய வழிபாடுகள் அருட்தந்தை அன்ரனி பாலா தலைமையில் இடம்பெற்றது.
அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர்.
இதேவேளை ஒட்டகப்புலம் மக்கள் யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனையும் வாழ்த்தி வரவேற்றனர்.

ad

ad