புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

தனக்கும் சரத்குமாருக்கும் உண்மையில் என்னதான் பிரச்சனை? உண்மையை மனம் திறந்த விஷால்..! விவரம் உள்ளே..


download-8
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
கூட்டமொன்றில் கலந்து கொள்ள சென்ற விஷால் அங்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவே தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். சரத்குமார் அணியினரின் சமரசப் பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளித்த விஷால், அவர்களுடைய சமரசப் பேச்சுவார்த்தையை தான் மதிப்பதாகவும், ஆனாலும் சமரசப் பேச்சுவார்த்தையில் தனக்கு உடன்பாடில்லை எனவும் கூறினார்.
தேர்தலில் பங்கு கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என கூறிய விஷால், அவ்வாறு தேர்தலில் நிற்பது குற்றம் என்றால், அந்த குற்றத்தை தான் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய சொந்தப் பிரச்னை தொடர்பாகத்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த விஷால் நினைப்பதாக சரத்குமார் அணியினர் அண்மையில் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்த அவர் , தான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்க நினைக்கவில்லை என்றும், குடும்பங்களை சேர்த்து வைக்கவே தான் தற்போது தேர்தலில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ஆனால் , மனச்சாட்சிக்கு உகந்து வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ad

ad