புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)


சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக் கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிசார் தடியடி  நடத்தியுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய மாணவர் பேரவைத் தேர்தலை, எந்தவித காரணமும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பேரவை தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் சாலையில் மாணவர்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்ததுடன், 2 மாணவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்கள் சமாதானம் செய்ததை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

ad

ad