புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை காரணமாக இன்று அதிகாலை தொடக்கம் விமல் வீரவன்ச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து தினேஸ் குணவர்த்தன பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, அவருக்கு தன் பயணத்தைத் தொடர அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடிவரவுத் திணைகக்ள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் விமல் வீரவன்சவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் வெளிநாடு செல்ல முயன்றதே இதற்கான காரணமாகும்.
ஒரு கடவுச்சீட்டு காணாமல் போன நிலையில் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்தாலும் அதனை குடிவரவுத்திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மற்றபடி அதனை பயன்படுத்துவது கடும் குற்றமாகும். இதனையே விமல் வீரவங்ச மேற்கொண்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விமல் வீரவன்சவின் வாக்குமூலத்தைப் பதிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் அவர் இன்று மாலைக்குள் விடுவிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிய வருகின்றது.
(இரண்டாம் இணைப்பு)
வீரவன்ஸ நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
சட்டப் பிரச்சினை இல்லை என்றால் வீரவன்ஸவின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

ad

ad