புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

வைகோ முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்




மதிமுக தலைமைக் கழகமான தாயத்தில் 08.10.2015 வியாழக்கிழமை தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் ம.தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். வைகோ வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார் என அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad