புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

2 மாதம் முன்னர் இங்கிலாந்தின்விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் நடவடிக்கையால் தப்பியது.


இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக்
நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் உடனடி நடவடிக்கையால் மோதலுக்கு உட்படாமல் தப்பியது.  அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதுடன் மரணத்திற்கு மிக நெருங்கிய இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை.  எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ஜெட் விமானம் குறித்த இந்த சம்பவம் நடந்துள்ளது.  அதனை ரேடார் கண்காணிப்பு மையம் கண்டறிந்துள்ளது.  கடந்த ஆகஸ்டு 23ந்தேதி நடந்த இந்த சம்பவத்தை போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது.  இது குறித்து வெளியான தகவலில், முதன்மை அதிகாரியே அந்த நேரத்தில் பொறுப்புக்குரியவர்.  ஆனால் விமானி அறையில் விமானி இருந்துள்ளார்.  ராக்கெட் விமானத்தை நோக்கி வந்ததை பார்த்துள்ளார்.  ராக்கெட்டிடம் இருந்து தப்புவதற்கு விமானத்தை இடது புறம் திருப்ப அவர் உத்தரவிட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

விமான அறையில் இருந்த 5 ஊழியர்களும் விமானம் தரை இறங்கிய பின்பே இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளனர்.  அதன்பின் அன்றிரவு எகிப்திலேயே தங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.  எனினும் அவர்கள் இங்கிலாந்திற்கு திரும்ப செல்லும் முடிவையே தேர்ந்தெடுத்தனர்.  இந்த ராக்கெட்டை ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி மற்றொரு பயணிகள் விமானமும் கண்டுள்ளது.

எகிப்தின் ராணுவ பயிற்சியில் ஒன்றாக இந்த ராக்கெட் வந்துள்ளது என சம்பவத்திற்கு பின் விமானிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.  ஆனால் கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இங்கிலாந்து அரசாங்க உத்தரவின்படி, ஷார்ம் எல் ஷேக் நகரில் தவித்து நிற்கும் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து நாட்டினர் சிறப்பு சார்ட்டர்டு விமானத்தில் தங்களது சொந்த நாட்டிற்கு சென்றனர்.

ad

ad