புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

பிணை நிபந்தனைகளில் உறவினர்கள் கையொப்பமிட்டதால் 24 கைதிகள் விடுவிப்பு


பிணையில் விடுவிக்கப்பட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளில் இதுவரை 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கைதிகளின் உறவினர்கள் பிணை நிபந்தனைகளில் கையொப்பமிட்டதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிணை வழங்கப்பட்ட 32 அரசியல் கைதிகளில் நால்வர் வேறு வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உண்ணாவிரத போரட்டத்தின் போது சுகவீனமுற்ற அரசியல் கைதிகள் 15 சிகிச்சையின் பின்னர் மீண்டும் சிவைறச்சாலைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad