இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர்
27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.
இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.