புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக புலமைப்பரில் பரீட்சை பாரக்கப்படுகின்றது! சித்தார்த்தன்


பெற்றோர்கள் தங்களுடைய கௌரவப் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பிள்ளைகளுக்காக இலவச பிரத்தியேக வகுப்புக்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
புலமைப்பரிசில் பரீட்சை உண்மையாக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் இன்றைக்கு முறியடிக்கப்பட்டுள்ளது.
இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், கிராமப்புற பாடசாலைப் பிள்ளைகளுக்கு நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய பெரிய பாடசாலைகளில் அல்லது மகாவித்தியாலயங்களில் அனுமதி பெறுவதாகவே இருந்தது.
இதற்காக நடாத்தப்படும் ஒரு பொதுப் பரீட்சையாகவே அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இது ஒரு கௌரவப் பரீட்சையாக அதுவும் முக்கியமாக பெற்றோருக்கான ஒரு கௌரவப் பரீட்சையாக பார்க்கப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் இந்தப் பரீட்சையை பிள்ளைகள் திறம்பட செய்ய வேண்டும் என்றார்.
ஏழாலைப் பகுதியில் வேலாயுதம் மணிவண்ணனின் அனுசரணையில் மேற்படி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
சபேசன் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) ஒழுங்கமைப்பில் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஆசிரியர் கேதீஸ்வரன், மணிவண்ணனின் சகோதரர் ஹரிவண்ணனும் கலந்துகொண்டிருந்தனர்.
ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்
வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ். ஊரெழுப் பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்திருக்கின்றன.
இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
கிராம சேவையாளர் சிவானந்தன் அந்தப் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துச் சென்று பாதிப்புக்களைக் காண்பித்து அவர்களுக்கு உதவ
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர், கோப்பாய் பகுதி பிரதேச செயலர் பிரதீபனுடன்  தொடர்பு கொண்டு அடுத்து வரவிருக்கின்ற வீட்டுத் திட்டத்தில் அந்தப் பகுதிக்கும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்
முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு, நல்லகண்டல், வசந்தபுரம், மாந்தளன், கள்ளப்பாடு, வண்ணாங்குளம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தனர் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், கந்தையாசிவநேசன்.
இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

ad

ad