புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

யாழ் இந்துக்கல்லுாரி அருகில் பிடிக்கப்பட்ட விபச்சார விடுதி சொல்லும் கதை என்ன? அதிர்ச்சித் தகவல்கள்.

நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால்.Jaffna-01
சுற்றிவளைக்கப்பட்டது.
இந்த விடுதியில் இருந்த அறைக்குள் ஒரு இளம் ஜோடி மட்டுமே அகப்பட்டது. மற்றைய அறைகளுக்குள் சிங்கள இனத்தைச் சேர்ந்த பலர் பதுங்கி இருந்ததாகவும் அறையை தட்டி திறக்க முற்பட்ட போது அவர்கள் வெளியே வரவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பொலிசாருக்கு அப்பகுதி இளைஞர்கள் இது தொடர்பாக தகவல் கொடுத்தும் பொலிசாரும் அங்கு வரவில்லை.இதனால் அந்த அறைகளைப் பரிசோதிக்க முடியாமல் போனதாக இளைஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடுதி யாழ் சாரங்கா நகைமாட உரிமையாளருக்குச் சொந்தமானதாகும். இது குறித்து சாரங்கா நகைக்கடை உரிமையாளரான சிவபாஸ்கரனிடம் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவு செய்து இயங்குவதாகத் தெரிவித்துக் கொண்டு பணக்காரர்களுக்கு வால்பிடிக்கும் இணையத்தளம் ஒன்று கேட்ட போது அவர் இவ்வாறு சொன்னாராம்
‘STS Technologic என்ற பெயரில் கணினி உதிரிப் பாகங்களை விற்பனை செய்து வரும் சின்னத்தம்பி சதீஸ் என்பவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சட்ட ரீதியாக STS Technologic இயங்கி வரும் அந்தக் கடையினையும், அதன் மேற் பகுதியான லாண்ட்மார்க் ஹொட்டல் இயங்கிவரும் கட்டிடத்தினையும் மாதாந்த வாடகைக்கு முற்பணம் பெற்றுக் கொண்டு கொடுத்திருத்தேன்.
STS Technologic கடையின் உரிமையாளர் சின்னத்தம்பி சதீஸ் என்பவருடன் நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டிடத்தில் ஏற்படுகின்ற சேதங்களுக்கும், வியாபாரத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளுக்கும் சின்னத்தம்பி சதீஸே பொறுப்பு என்றும் ஒப்பந்தம் கைசாத்திட்டிருந்தோம். ஆகவே, இன்று காலையில் நடந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பும் சின்னத்தம்பி சதீஸ் அவர்களையே சாரும்.
கட்டிடம் என்னுடையது என்பதற்காக அவரின் வியாபார நடவடிக்கைகளால் வரும் விளைவுகளுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது. இதனை பகுத்தறிவுள்ள மனிதர்கள் அனைவரும் புரிந்து கொள்வர்.
இதனை விடுத்து பொறுப்புக் கூற முடியாமல் ஒளிந்திருந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பிரபல்யமானவர்களைக் குறிவைத்து கற்பனைக்குச் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கும் இணையத்தளங்கள் துணிவிருந்தால் தங்களை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறான செய்திகளை வெளியிடட்டும் பார்க்கலாம்.‘ என்று சொன்னதாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த இணையத்தளத்தின் பொறுப்பாளர் யார் என்பதும் அவர் என்ன நோக்கத்திற்காக கனடாவில் இருந்து வந்து இங்கு இயங்குகின்றார் என்பது ஒரு புறம் இருக்க
சாரங்கா உரிமையாளர் சிவபாஸ்கரன் திருட்டு நகைகளை திருடர்கள் எனத் தெரிந்து கொண்டே வாங்கியதால் பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியான ஒருவராவார். இவரது ஏனைய சமூகப் பிறழ்வான நடவடிக்கைகள் நீதிமன்றில் குற்றவாளியாக்கப்படாததால் வெள்ளை மனிதனாகத் தோற்றம் காட்டலாம்.
குறித்த “லாண்ட் மார்க்” விடுதி பினாமியின் பெயரில் சாரங்கா நகைக்கடை முதலாளியே நடத்தி வந்துள்ளார். தப்பான காரியங்கள் நடைபெற்று தான் மாட்டுப்படாது இருப்பதற்காக அவர் பினாமிகளின் பெயரில் பல வர்த்தக நடவடிக்கைகளை மாற்றி நடாத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்று.
குறித்த “லாண்ட் மார்க்” விடுதியில் போதைப் பொருள் வியாபாரிகளும் தங்கிச் செல்வதாக சில அதிர்ச்சிப் புலனாய்வுத் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அங்கிருந்தே யாழ் இந்துக் கல்லுாரி மற்றும் ஏனைய இடங்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகிக்ப்பட்டுள்ளதாகச் சந்தேகம் வெளிவந்துள்ளது.
அத்துடன் இந்த விடுதிக்கு வந்து தங்கியிருந்த இளம் ஜோடி இருந்த அறைக்குள் ஒரு கால்ச்சங்கிலி புத்தம் புதிதாக காணப்பட்டது. அந்தக் கால்ச்சங்கிலி சாரங்கா நகைமாடத்துக்குரியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. குறித்த யுவதி தனது கால்ச்சங்கிலியையும் கழற்றி வைத்துவிட்டு காமலீலைகளில் ஈடுபட்டிருப்பாளா என்பது சந்தேகம்.??? அவளுக்கான விபச்சாரக் கூலியாக குறித்த கால்ச் சங்கிலியை சாரங்கா நகைக்கடை முதலாளி கொடுத்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணச் சமூகத்தை தற்போது மிகவும் சீர்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் சமூகத்தில் பிரபல்யமானவர்கள் என தங்களைக் காட்டிக் கொண்டிருப்பவர்களே!! இவர்களில் சிலர் அரசில்வாதிகளாகவும், அரச உயரதிகாரிகளாகவும், பிரபலவர்த்தகர்களாகவும் சமூகசேவகர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக சில சமூகநலன் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் உருவத்தை மறைத்து பாஞ்சோதிகளாக உலாவருகின்றார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரையும் தோலுரித்துக் காட்ட வேண்டிய நேரம் வெகு விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.Jaffna-01

ad

ad