இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த கர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியனவும் பொது அமைப்புக்களும் கோரியதற்கிணங்க இந்த கர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனையடுத்து யாழ்.மாவட்டத்தில் பல்கலைக்கழகம், பாடசாலைகள், மற்றும் வங்கிகள் உள்ளடங்கலாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார் தொடர் றோந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்படும் கர்த்தாலுக்கு இணையாக இன்றைய தினம் பேருந்து போக்குவரத்து மற்றும் முச்சக்கர வண்டிகள் கூட நிறுத்தப்பட்ட நிலையில் யாழ்.குடாநாடு முழுமையாக முடக்கப்பட்டு கர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
- கைதிகளின் விடுதலை கோரி பூரண கர்த்தாலுக்கு கிளிநொச்சி முழு ஆதரவு
- மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு!
- இன்று சேவையில் ஈடுப்பட்டதற்காக யாழ் பேருந்து மீது கல் வீச்சு
- பூரண ஹர்த்தால்: வவுனியாவில் இயல்பு நிலை முடங்கியது
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிப்பு
- மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பு: போக்குவரத்து முற்றாக பாதிப்பு
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திருமலையில் ஹர்த்தால்
- அம்பாறையில் பூரண கர்த்தால்: இயல்பு நிலை ஸ்தம்பிதம்
- கிளிநொச்சியிலும் பூரண ஹர்த்தால்! கல்வி நடவடிக்கை ஸ்தம்பிதம்
- தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்