புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

 
 
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் நிமித்தம் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக கட்டணங்கள் வழங்கப்படாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இவர்களை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad