புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சுமந்திரன்

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலை சென்றிருந்தார்.
கைதிகளுடன் உடல்நிலை தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது அவ்விடத்திற்கு சென்றிருந்த தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முதலமைச்சரிடம் சென்று கை கொடுத்ததுடன், ஒரு சில நிமிடங்கள் உரையாடியுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த பா.உறுப்பினர் சுமந்திரன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இவ் எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad