நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்குநாடாளுமன்றில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடியபோது சபையில் எழுந்துநின்ற குழுக்களின்பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அஞ்சலி செலுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.