புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2015

நடிகர் சந்தானம் இரண்டாவது திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போட்டோ



திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று பரவிய வதந்திக்கு இரு தரப்பிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

இனிமே இப்படித்தான் படத்துக்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை லொள்ளுசபா இயக்குநர் ராம்பாலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக ஆஷ்னா சாவேரி. இவர் ஏற்கெனவே சந்தானத்துடன் இனிமே இப்படித்தான், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இன்று காலை திடீர் என சந்தானம் குறித்து வதந்தி பரவியது. சந்தானம், தன்னுடன் நடிக்கும் நடிகை ஆஷ்னாவை ரகசியமான முறையில் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார் என்று அதற்கேற்ற ஒரு புகைப்படத்துடன் இணையத்தில் வதந்தி உருவானது.

இதுகுறித்து ஆஷ்னா தரப்பில், திருப்பதியில் எதிர்பாராதவிதமாகத்தான் அவர் சந்தானத்தைச் சந்தித்தார். ஆஷ்னா தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் திருப்பதி செல்வது வழக்கம். அப்போது அங்கு இயக்குநருடன் திருப்பதிக்கு வந்த சந்தானத்தை சந்திக்க நேர்ந்தது. அதன் புகைப்படம் தான் இணையத்தில் வெளியானது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.


அதேபோல சந்தானம் தரப்பு இதுபற்றி கூறும்போது, ஒவ்வொரு புதுப்படம் ஆரம்பிக்கும்போதும் திருப்பதிக்குச் செல்வது சந்தானத்தின் வழக்கம். இந்தமுறை படக்குழுவினருடன் திருப்பதி சென்றார். மற்றபடி, வதந்தியில் துளிகூட உண்மையில்லை என்றார்கள்.

ad

ad