பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வாடிக்கையாளர்கள் விரும்பினால்
பரிஸிற்கான அவர்களது விமான சீட்டுக்களை மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக எயர் கனடா அறிவித்துள்ளது.
மேலும், தற்சமயம் பரிஸிற்கான விமான சேவைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது
பிரான்ஸ் செல்லவிருக்கும் பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்பட முன்னர் தங்கள் விமான நிலைமைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஜ.எஸ் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.