புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிசார்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்


காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பொலிசார் இலஞ்சம் மற்றும் கப்பம் வாங்கிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவிடம் இது தொடர்பிலான பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அவர்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினர், காணாமல் போனவர்கள் தொடர்பில் முக்கிய தகவல்களைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து இவ்வாறு பணம் வாங்கியுள்ளனர்.
எனினும் பணம் வாங்கிய பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்குப்பதிலாக பணம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
இவ்வாறாக வடக்கு மற்றும் கிழக்கில் ஏராளம் உறவினர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணமும் ஏமாற்றிப் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

ad

ad