வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து இங்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் வலி வடக்கு பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே இன்றும் இவ்வாறான இடப்பெயர்வை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
58 குடும்பங்களை சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மக்கள் இங்கு தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.