புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

பாரீஸில் தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தினர் அதிரடிக் கைது….! ஐரோப்பாவில் தொடர் தேடுதல் வேட்டை.

பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு-மதுபான விடுதிகள் உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் நடத்திய அதி பயங்கர தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 352 பேரில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களில் இருவர் மெக்சிகோ நாட்டையும், ஒருவர் இங்கிலாந்தையும் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 7 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாயினர். ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதனிடையே தீவிரவாதிகள் பற்றி துப்பு துலங்கி வருகிறது. இந்த தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் தந்தை-மகனை பாரீஸ் நகர போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் இருவரையும் போலீசார் விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பலரைத் தேடி வருகின்றனர். பாரீஸ் பத்தாகிளான் இன்னிசை அரங்கில் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ஒருவர் 29 வயது உமர் இஸ்மாயில் மஸ்தேபை என்பதும், 2-வது நபர் அப்துல்லாபக் என்பதும் தெரிய வந்துஉள்ளது. இதில் முதல் தீவிரவாதியான உமர் இஸ்மாயில் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக பாரீஸ் நகரைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தாரை கைது செய்து உள்ள போலீசார் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் ஒருவர் வைத்திருந்த பையில் சிரியா நாட்டின் பாஸ்போர்ட் ஒன்றும் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர். பாரீஸ் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும், சிரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று பிரான்ஸ் புலனாய்வுத் துறை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளன.
இதனிடையே பாரீஸ் நகர தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரின் அருகே உள்ள செயின்ட்மோலன்பீக் நகரில் 3 பேரை பிரசல்ஸ் நகர போலீசார் கைது செய்தனர். பாரீஸ் நகரில் இன்னிசை அரங்கு அருகே நின்ற காரின் நம்பர் பிளேட் பிரசல்ஸ் நகரின் உரிமம் பெற்றதாக இருந்தது. இந்த காரை வாடகைக்கு எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஜெர்மனியின் பவரியா நகரிலும் பாரீஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் தீவிரவாதிகள் 8 பேரும் பெல்ஜியம் நாட்டில் அண்டை நாடான பிரான்சுக்குள் எளிதாக நுழைந்து பாரீஸ் நகரில் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.paris-attack

ad

ad