புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

இன்ஸ்பெக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்ற முயற்சிக்கும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த
தன்னை இன்ஸ்பெக்டர் ஜமுனா ராணி மிரட்டுவதாக நடிகை ஹேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகை ஹேமலதா. சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கணவர் இளையராஜா  2 வது திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும் ,  எனவே அவர் மீதும், அதற்கு உதவும் அவரின் தந்தை ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த புகார் மனு குறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து மகளிர் போலீசாரும்,  நடிகை ஹேமலதாவையும் அவரது கணவர் இளைய ராஜாவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில் நடிகை ஹேமலதா, கமிஷனர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் மனு கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், " திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐமுனா ராணி எனது புகார் குறித்து விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் எனது கணவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அவதூறான வார்த்தைகளாலும் மகளிர் போலீசார் திட்டினர். ஜமுனா ராணி எனது புகாரை வாபஸ் பெற சொல்லி மிரட்டினார். எனவே எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட வேண்டும் " என்று தெரிவித்தார்.

ad

ad