புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலவரை அற்ற உண்ணாவிரதத் தொடர்

**
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற
எமது உறவுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கக் கோரியும், பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசிற்கு போர் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான அரசியல் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காலவரை அற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
காலம் : 16.11.2015 திங்கட்கிழமை
நேரம் : மாலை 5மணி தொடக்கம்
இடம் : 10 DOWNING STREET WESTMINISTER, LONDON, SW1A 2AA
பிரித்தானியா வாழ் எமது உவுகளே அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச்சோர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியா.

ad

ad