திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்னுபிரியா தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாளவியா சிபிசிஐடி போலீசாரால் சம்மன் கொடுத்து கடந்த மாதம் விசாரிக்கப்பட்டார்.
விஷ்ணுப்ரியா தற்கொலை காரணம் தெரிவதற்கே வழக்கறிஞர் மாளவியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் தற்பொது வழக்கறிஞர் மாளவியாவை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து வழக்கறிஞர் மாளவியா தொடர்ந்து தன்னை விசாரணைக்கு அழைத்து சிபிசிஐடி போலீசார் டார்சர் செய்வதாக கூறி மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து மாளவியா அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி டிஎஸ்பி விஷ்னுப்ரியா தற்கொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்னுபிரியா தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாளவியா சிபிசிஐடி போலீசாரால் சம்மன் கொடுத்து கடந்த மாதம் விசாரிக்கப்பட்டார்.
விஷ்ணுப்ரியா தற்கொலை காரணம் தெரிவதற்கே வழக்கறிஞர் மாளவியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் தற்பொது வழக்கறிஞர் மாளவியாவை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து வழக்கறிஞர் மாளவியா தொடர்ந்து தன்னை விசாரணைக்கு அழைத்து சிபிசிஐடி போலீசார் டார்சர் செய்வதாக கூறி மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து மாளவியா அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி டிஎஸ்பி விஷ்னுப்ரியா தற்கொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.