3,500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வருடாந்தம் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக புலனாய்வுப்பிரிவு
நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேவேளை, போதைப்பொருள் பரிமாற்றல் நடவடிக்கைகள் வடக்கு பிரதேச கரையோ ரமாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்குள் கொண்டுவரப்படும் 3,500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளில் 1,000 கிலோகிராம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஏனையவை இங் கிருந்து வெளிநாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே ஹெரோயின் போதைப்பொருள் வெளிநாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையமாக இலங்கை விளங்குவதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இந்நிலையில் 52 நாடுகளின் உதவிகளைப் பெற்று இலங்கையில் செயற்படும் போதைப்பொருள் வலையமைப்பை முறியடிப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.