வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’கடலூரில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும். வீடுகளை இழந்த 45 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த வீடுகள் 10 கோடி செலவில் சீரமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.