வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக வடபகுதியில் மீள் குடியேறிய கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவர்களின் இயல்பு நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கில்
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு எளுவன்குளத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதோடு குறுக்கு வீதிகளின் ஊடாக போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக சாந்தபுரம் மற்றும் பொன்னகர் பகுதிகளில் மழை வெள்ளத்தினால் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தபுரம் பகுதியில் மழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், இவற்றுள் 18 வீடுகள் முழுமையாகவும், 32 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர பொன்னகர் பகுதியிலும் 12 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முறிகண்டி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
திகமழை காரணமாக இராஜாங்கனை, தப்போவ, தெதுருஓயா, உடவளவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு அவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பரந்தன், சிவபுரம் வெள்ளத்தில்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 502 குடும்பங்களைச் சேர்ந்த 1646 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
கடும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக இதுவரைக்கும் நேற்று சனிக்கிழமை மதியம் வரை மாவட்டத்தில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 1646 பேர் பாதிக்ப்பட்டுள்ளதோடு 19 வீடுகள் முற்றாக சேதமடைந்தும், 209 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன
இதேவேளை 99 குடும்பங்களைச் சேர்ந்த 346 பேர் மழையினால் பாதிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பொன்னகர் மத்தி 36 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்து திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இவர்களது வீடுகளுக்கு வெள்ள நீர் வெகுவாக கழுத்து மட்டம் வரை உயர் வடைந்தமையினால் பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த திருமுறிகண்டியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் இதே பாடசாலையில் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமான சமைத்த உணவுகளை மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவு வழங்கி வருகிறது
பெய்து வரும்கடும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் இறந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு குளத்தின் ஐந்து வான் கதவுகள் நேற்று சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
வடக்கின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான இரணைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அதிகரித்த நீர் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஐந்து வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளன.
குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெறுவதனால் இவ்வருடம் குளத்தின் நீர் மட்டத்தினை 24 அடியாக வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது குளத்தின் நீர் மட்டம் நேற்றுக் காலை 28 அடி 5 அங்குளமாக காணப்பட்டுள்ள நிலையில் குளத்தின் ஐந்து வான் கதவுகள் ஒரு அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படுமானால் மேலும், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்
மேலும், குளத்தின் கீழ் நீர் செல்லும் தாழ் நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
இதேவேளை, நேற்றைய தினம் குளத்திற்கு விஜயம் செய்த இயற்கை வளங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் இரணைமடு குளத்தின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.
கிழக்கில்
இதேவேளை, நேற்றைய தினம் குளத்திற்கு விஜயம் செய்த இயற்கை வளங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் இரணைமடு குளத்தின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.
கிழக்கில்
கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தொடரும் அடை மழையினால் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ்நிலப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வவுணதீவு, ஏறாவூர், செங்கலடி, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, கிரான், வாழைச்சேனை, வாகரை போன்ற பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சவளக்கடை மத்திய முகாம் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.