புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2015

விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்

பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 129 பேர் பலியானதைத் தொடர்ந்து ஐ.எஸ் தீவிராதிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே வலியுறுத்தினார்.
மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் 3 நாட்களுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பிரான்ஸ் நேற்று வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் இந்த தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ரஷ்யாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

ad

ad