புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நான்கு கழகங்களுக்கு மொத்தமாக 12 உதைபந்துகள் -சூழகம்

தீவகம்‬ பிராந்தியத்தில் விளையாட்டுத்துறையினை விருத்தி செய்வதற்கு ‪#‎சூழகம்‬ அமைப்பினர் கடந்த நாட்களில்
பல்வேறு செயற்பாடுகளினை மேற்கொண்டிருந்தமை அறிந்ததே ! இதன் தொடர்ச்சியாக அண்மையில் வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நான்கு கழகங்களுக்கு மொத்தமாக 12 உதைபந்துகள் சூழகம் ( Soozhagam Soozhagam ) அமைப்பினால் வழங்கப்பட்டது . வேலணை - துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கு நான்கு பந்துகளும் + புங்குடுதீவு நசரத் கழகத்திற்கு மூன்று பந்துகளும் + புங்குடுதீவு பாரதி கழகத்திற்கு மூன்று பந்துகளும் + புங்குடுதீவு ஐங்கரன் விளையாட்டுக் கழகத்தினருக்கு இரண்டு பந்துகளும் பகிரப்பட்டன . திரு . நல்லதம்பி கருணாநிதி ( புங்குடுதீவு நல்லா கர்ணா ) - திரு . க.குணாளன் ( Kunalan Karunagaran ) ஆகியோரது நிதிப்பங்களிப்பில் இவ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன . நன்றி

ad

ad