புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

14 நாட்களே­யான சிசுவின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய்

கொழும்பு, பொரளை காசல் மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லையில் தாயொ­ருவர் தனது 14 நாட்களே­யான பெண் சிசுவை கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்­ளது.

காசல் வைத்­தி­ய­சா­லைக்கு காய்ச்­ச­லுக்­காக சிகிச்சை பெற­வந்த 34 வயது தாய் ஒரு­வரே உட­னி­ருந்த தனது குழந்­தை­யை இவ்­வாறு கொலை செய்­துள்ளார்.

இச்­சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சம்­ப­வத்தை தொடர்ந்து அந்த தாய் கைது­செய்­யப்­பட்டு எதிர்­வரும் 31 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,
மாதி­வல பிர­தே­சத்தைச் சேர்ந்த 34 வய­தான பெண் ஒருவர் காய்ச்­ச­லுக்கு சிகிச்சைப் பெற காசல் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இதன்­போது அவ­ருடன் அவ­ரது 14 நாட்­க­ளான சிசுவும் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வழ­மை­யான மருத்­துவ பரி­சோ­த­னைகள் இடம்­பெற்ற நிலையில் காலை 10.10 மணி­ய­ளவில் அப்­பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் இருப்பதை அவ­தா­னித்­து தாதி­யர்கள் உட­ன­டி­யாக பொரளை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கவே பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது தானே குழந்­தையை கழுத்தை நெரித்து கொலை செய்­த­தாக தாய் பொலிஸாருக்கு தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரை கைது செய்த பொலிஸார் புதுக்­கடை பிர­தான நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் அவரை ஆஜர்­ப­டுத்தி விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

இந்த தாய்க்கு ஏற்­க­னவே 5,3 வய­து­களில் இரு ஆண் பிள்ளகைள் இருப்பதாக கூறும் பொலிஸார் கணவன் ஆசிரியராக தொழில் புரிபவர் எனவும் அப்பெண் தொழிலுக்கு செல்பவர் அல்ல எனவும் தெரிவித்தனர்.

சிசுவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் காசல் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

ad

ad