புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு: அமைச்சர் சுவாமிநாதன்


தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்கவுடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
குற்றமுள்ளவர்கள் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுபடுவர் ஏனைய குற்றம் சுமத்தப்படாமல் உள்ளவர்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்படவுள்ளனர்.
இந்தநிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதமே இந்த விடயத்தில் பிரச்சினையாகியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்;ளார்.
இதேவேளை அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க ஆலோசிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad