புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

டிசம்பர் 26: தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு


"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே
வீட்டில் உண்டு. சமீபத்தில் படித்த புத்தகம், பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்’.
ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவருடன் தொலைபேசிப் பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு உண்டு.
மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும் நிதானமாக, மனம் நோகாமல்... ஆனால், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை.
வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அடிக்கடி அவர் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகள்.
நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள்.
நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம்.
தோழர்கள் இவரின் பிறந்த நாளை (டிசம்பர் 26) எளிமையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர் எதையுமே பொருட்படுத்துவது இல்லை.
நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார்.
காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும்.
ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும்.
அரசுக் குடியிருப்பில் 6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை 4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.
அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படாதவர், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஹரி மாரடைப்பால் இறந்தபோது, கேவிக் கேவி அழுதுவிட்டார். ஒரு மகனைப் போல அய்யாவிடம் பழகியவர் ஹரி.
பயணங்களில் தோழர்கள் வாங்கித் தருகிற உணவைத்தான் உட்கொள்வார். முன்பு விரும்பிச் சாப்பிட்ட கத்தரிக்காய், மீன், கருவாடு ஆகியவற்றை இப்போது தள்ளிவைத்து இருக்கிறார்.
இணையத்தில் ஈடுபாடு இல்லை. ஃபேஸ்புக்கில் உறுப்பினர் இல்லை. ஏன்? செல்போன்கூட முழுமையான பரிச்சயம் கிடையாது. அழைப்பு வந்தால் பேசுவார். அவ்வளவுதான் தெரியும்.
இன்டர்மீடியட் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் கட்சியில் நுழைந்தவர் நல்லகண்ணு. ஹோசிமின்தான் இவரது ரோல் மாடல். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லி உள்ளார்.
எல்லோருக்கும் 'தோழர் நல்லகண்ணு’. தோழர்களுக்கு 'ஆர்.என்.கே.’
யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச மாட்டார். எந்தக் கட்சித் தலைவர் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது.
ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார். ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு அவர்களின் திருமணம், கட்சி பார்த்து நடத்திவைத்தது. அம்மையாரை அவர்கள் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான்

ad

ad