புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு

தூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம்
வயதில் சராசரி பெண் போல வாழ்ந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது.
அவரது உடலின் எடை படிப்படியாக கூட ஆரம்பித்தது. சுமார் 200 கிலோ எடை அதிகரித்த நிலையில், அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் அவர் 15 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்தார். கிட்டத்தட்ட 300 கிலோவுக்கு மேல் உடல் எடையுடன் வாழ்ந்து வந்தார். டோராவை, அவருடைய தங்கை செல்வம் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் டோரா நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை தகனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. டோராவின் உடலை உறவினர்கள் பலர் சுமந்து சென்றனர். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
டோராவை சுமார் 15 ஆண்டு காலம் பராமரித்து வந்த தங்கை செல்வம், தற்போது சுமார் 150 கிலோ எடையுடன் உள்ளார். உயிரிழந்த டோராவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ad

ad