கிறிஸ்துமஸ் விடுமுறையை உள்ளடக்கிய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதியிலிருந்து இன்று (சனிக்கிழமை) காலை வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை 118 பேரும், 24 ஆம் திகதியிலிருந்து 25 திகதி வரை 83 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றிலிருந்து இன்று காலை வரை 105 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.