கொழும்பு மாநகர சபையின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபாய் பெறுமதியான நினைவு நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
வட்ட வடிவிலுள்ள இந்த நாணயத்தின் விளிம்பில் "இலங்கை மாநகர சபை" என தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் கொழும்பில் அமைந்துள்ள நகர மண்டபத்தில் விற்பனைக்கு உள்ளன.