புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போனதால் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள்
தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவரை தலா ஐம்பதாயிரம் ரூபா காசுப்பிணையிலும் தலா ஒரு இலட்சம் ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் இல -2 பாடசாலையில் அதிபரின் கைத்தொலைபேசி ஒன்று கடந்த மாதம் பாடசாலை நேரத்தில் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து மேற்படி பாடசாலையில் கல்வி கற்றுவரும் தரம் 06 வகுப்பினைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த தரம் -9 மாணவர்கள் இருவர் தாக்கியதாகவும் குறித்த மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 27ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசாரினால் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் தரம் 9 வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த 9ஆம் திகதி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியினாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரையும் இரு மாணவர்களையும் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை மன்றில் ஆயராகுமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்த போதும் குறித்த தினத்தில் மூவரும் ஆஜராகாத நிலையில் இவர்களை கைது செய்த கிளிநொச்சி மாவட்ட பொலிசார் நேற்று முன்தினம் (21-12-2015) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து அதிபர் தவிர்ந்த இரு மாணவர்களையும் தலா ஐம்பதாயிரம் ரூபா காசுப்பிணையிலும் அதிபர் உட்பட மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad