புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

மூன்று பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன


மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக இணைந்து நிறுவியுள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை மேலும் மூன்றினால் உயர்வடையவுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதில் ஒர் பிரதி அமைச்சர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவிற்கு வழங்கப்படவுள்ளது.
ஏனைய இரண்டு பிரதி அமைச்சர் பதவிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இவர்கள் இருவரும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாக இந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

ad

ad