புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சிம்பு: நடிகர் கார்த்திக்



 

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர்,  ‘’நான் திரைத்துறையை நேசிப்பவன். 35 ஆண்டுகளாக அதில் இருந்து வருகிறேன். கோவில் போல அதை நேசிப்பவன். ஆனால், தமிழ் தற்போது தேய்ந்து வருகிறது. ‘தரம்’ என்பதில் இருந்து ஒருபோதும் தாண்டக்கூடாது.

நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், கருத்து சுதந்திரத்தை திரைத்துறையினர் தவறாக பயன்படுத்தக்கூடாது. சிம்பு பாடிய ‘பீப்’ பாடலை நானும் கேட்டேன். பாடலில் பல்லவிக்கு பிறகு ஒரு வரியைக்கூட கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன். அவருடைய தந்தை (டி.ராஜேந்தர்) எனக்கு நண்பர்.

பாடலை தான் வெளியிடவில்லை என்று அவர் (சிம்பு) கூறினாலும், திரைத்துறையில் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் தோன்றவே கூடாது’’என்று தெரிவித்தார்.

ad

ad