புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவை அமைப்பு உருவாவதற்கு காரணம் சம்பந்தனே!– சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தர். மேலும் கருத்து தெரிவித் அவர்,
பாராளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மாற்றப்படவுள்ள சூழ்நிலையில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை தமிழ் தலைமைகளிடம் காணப்படுகின்றது.
இத் தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் வைத்து சரியானதா அல்லது பிழையானதா என்று ஆராய வேண்டும். அதனை விடுத்து, கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் ஒன்று அல்லது இரண்டு பேர் தாங்கள் விரும்பியவாறு அரசாங்கத்துடன் பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மக்களின் தலைவிதி ஒரிருவரின் கைகளில் இல்லை. இதனை சம்பந்தன் சரியாக கையாண்டிருந்தால் தமிழ் மக்கள் பேரவை உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.
நல்ல விடயங்கள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டையும் கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் மாத்திரமின்றி, தற்போது இளைஞர்கள் மத்தியில் பரவும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்தல், கல்வியில் பின்தங்கியிருக்கும் வட மாகாணத்தை முன்னேற்றுதல், சுகாதாரத்தை மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும்.
அமைப்பின் மீது சாயம் பூசுதல் அல்லது தேவையான வியாக்கியானங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad