புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு விஷயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்று விட்டே கொழும்பு திரும்பினார் என தெரியவருகின்றது.
இன்றைய தினம் யாழிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்
இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்றுவிட்டே பலாலி விமானப் படைத் தளத்தில் இருந்து கொழும்பிற்கு அவர்  திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் அங்கஜன் இராமநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றதுடன்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்று விட்டே கொழும்பு திரும்பினார் என தெரியவருகின்றது.
இன்றைய தினம் யாழிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்
இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்றுவிட்டே பலாலி விமானப் படைத் தளத்தில் இருந்து கொழும்பிற்கு அவர்  திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் அங்கஜன் இராமநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றதுடன்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad