புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி


விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொடரில் டோனி ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற டோனி ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.
நேற்று நடந்த கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் டோனி 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் அவரது அணி 44 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
இதே தொடரில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங்கும் விளையாடி வருகின்றனர். இவர் இந்த தொடரில் அதிரடியில் அசத்தி வருகிறார்.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியும் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 270 எடுத்தது.
271 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் கைகொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 32 பந்துகள் மீதமிருக்கையில் எளிதில் வெற்றி பெற்றது.
அதிரடியில் மிரட்டிய யுவராஜ் சிங் 59 பந்துகளில் 78 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்தார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யுவராஜ், தேசிய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் வாய்ப்பை தக்க வைத்து வருகிறார். ஆனால் அவருக்கு தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் தேசிய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.

ad

ad