புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

அவுஸ். சிட்னியில் கோரப்புயல்! நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது

அவுஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலங்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும் வீடுகள் கடும் சேதம் அடைந்தன.
ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தனர். சுழற்றியடித்த புயல் காற்றுடன் தொடர்ந்துபெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சில வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. கார்கள் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு கவிழ்ந்து கிடந்தன.
தொடர்மழையின் விளைவாக நகரின் பல பகுதிகளில் உள்ள வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக இவ் வருடம் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ள நிலையில் உலகின் பல பாகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

ad

ad